சனி, 29 ஜூன், 2024


மயானத்திலிருந்து வெளியே வந்ததும்
மீண்டும் நீ யாரோ
நான் யாரோ...

மீண்டும் நீ
மரணிக்கப் போவதுமில்லை
நாம் சந்திக்கப் போவதுமில்லை

மறந்து வாழ்வது
பழகிவிட்ட ஒன்றுதான்
மொத்தமாக நீ மறந்தாய்
வழக்கம்போல நான் மறந்தேன்
     
காலை கண்ணாடியில்
மாலை கண் ஆடியில்
எனை நானே புதைப்பேன்
நடுவில் எண்ணிலாமல் மறப்பேன்

மொத்தமாக ஒருநாள் மறப்பேன்
மயானத்திற்கு உள்ளே வந்ததும்
மீண்டும் நீ அறிவாயோ
நான் அறிவேனோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக