மூன்றாம் நாளில் மட்டுமல்ல
முதல் நாள் முதல்
இதுநாள் வரையிலும்
ஒவ்வொரு நாளும்
உயிர்த்தெழுகிறவர்
ஏழைகள்...
சுமக்கும் சிலுவையிலேயே
தூங்கி எழுகிற வாழ்க்கை
தூக்கி அலைகிற பிழைப்பு
எல்லோரும் சமமாய்
வாழ்ந்திடும் கனவிற்கு
எதிரானவர்களுக்கு ஏது பாவமன்னிப்பு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக