ஓடும் ரயில் முன்
ஒரு பூ உதிர்ந்து
தன் வாழ்வின் மொத்த வலிகளையும்
சிவப்பு மையில் எழுதியது...
அந்த மொழியை
யார் அறிவர்?
யார் வலியை
யார் உணர்வர்?
தன் துக்கங்களின் ஆழத்தில்
வெட்டும் மின்னல் வலிகள்
தனக்கு மட்டுமே வெளிச்சம்
அதைக் காண முடியாமல்
பேரொளியில் கலந்தாயோ...
நண்பா சபேஷ்ராஜா
உனது ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக