(சிறுகதை - 2)
"என்னப்பா யாரு ஜெயிச்சாங்க?" (என்று அந்த அம்மா)
பிஜேபி (என்று நான் சொல்ல)
"திமுக வரலயா..."
அவங்க 40க்கு 40 ஜெயிச்சிட்டாங்க
"ஓ 80தா..."
இல்ல மொத்தம் 40, அந்த 40லயும் ஜெயிச்சிட்டாங்க
"ஓ... ஸ்டாலின் வந்துட்டாருல..."
சிரித்துக்கொண்டே ஆமா ஆமா வந்துட்டாரு
(அவளுக்கு எல்லாவற்றையும் புரிய வைக்க வேண்டும் என்ற நோக்குடன், தானாக முன்வந்து)
தமிழ்நாட்டுல ஸ்டாலின் 40ம் ஜெயிச்சி வந்துட்டாரு. இந்தியாவுல மொத்தம் 543, அதுல மோடி 290/ ராகுல் காந்தி 235/ மற்றவை 18. மோடி தான் அதிகம்.
"அப்ப ஸ்டாலினோட வருமே அந்த புள்ள ஜெயிச்சிடுச்சா?"
ராகுல் காந்தி தானே, இல்ல மோடி தான்.
"ஏன் ஸ்டாலின் தான் ஜெயிச்சிடுச்சுல"
ஸ்டாலின் தமிழ்நாட்டுல தான். இந்தியாவுல மோடி தான்.
"பாவம் அந்த புள்ள...(ராகுல்காந்தி)"
ஆனாலும் காங்கிரஸ் கொஞ்சம் தான் கம்மி. நாளைக்கு தான் சரியா தெரிய வரும்.
யாரு உண்மையில் ஜெயிக்கப் போறாங்கன்னு.
"அப்ப மோடி வர மாட்டாரா?"
நாளைக்கு சரியா தெரிஞ்சிடும் அம்மா.
"பாவம் அவர்தான் கொரானா அப்ப 3000 போட்டாரு எனக்கும், என் மருமகளுக்கும்..."
ஓ அப்படியா... எப்ப? முதல் கொரானலயா? 2வது கொரானலயா?
"தெரியல... கொரானா அப்ப போட்டாரு"
சொல்லிட்டு வெள்ளந்தியா போறாங்க அந்த அம்மா...
எத்தனை முறை கேஸ் வீட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த அம்மா மோடிய சபிச்சி இருக்கும். ஆனா ஏன் இப்ப அவருக்காக ஜெபிக்குது... அவங்களுக்கு அது புரியல, எனக்கு இது புரியல... இந்த ரெண்டுக்கும் நடுவுல இந்த அரசியல்வாதிங்க பண்றது அவங்களுக்கே புரிஞ்சி தான் செய்றாங்களான்னும் தெரில...
காந்தியோட அந்த மெல்லிய புன்னகை மனதில் வந்து போகிறது. ஒருவகையில் மோடி சொன்னது கூட சரி போலத்தான் தோனுது. (காந்தி படம் வந்த பிறகு மட்டும் என்னத்த காந்திய பத்தி தெரிஞ்சுகிட்டோம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக