கணக்கில்லாமல் இறுமிகணக்கில்லாமல் இறுமி
இரவு தோறும் உறக்கமின்றி
காலையில் கண்கள்
தாழ்வாரம் சென்ற கிணற்று நீராக
விரல்களால் தூரெடுத்து
ஊற்றுக் கண் மேலெடுத்து
கடமைக் கண் பார்க்க
உடமை வாகனத்தில் உருண்டோடி
சில்லரைக்கு சில சிகரெட் வாங்கி
கல்லறைக்கு புகை வேள்வி வளர்த்து
நாளெல்லாம் வேலை பார்க்கிறேன்
நாளை வாழ்வதற்கு...
நாளைக்கும்
ஒரு நாளைதான் முளைக்கிறது
தேகம் காத்தால்
இதயம் கோர்த்தால்
இன்று பூக்கும்
இன்னல் நீக்கும்
தூங்கச் சொர்க்கம் சேர்க்கும்
வாழ்வை இனிதாக்கும்...
h
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக