செவ்வாய், 5 மார்ச், 2024


கணக்கில்லாமல் இறுமிகணக்கில்லாமல் இறுமி 

இரவு தோறும் உறக்கமின்றி

காலையில் கண்கள் 

தாழ்வாரம் சென்ற கிணற்று நீராக

விரல்களால் தூரெடுத்து

ஊற்றுக் கண் மேலெடுத்து

கடமைக் கண் பார்க்க

உடமை வாகனத்தில் உருண்டோடி

சில்லரைக்கு சில சிகரெட் வாங்கி

கல்லறைக்கு புகை வேள்வி வளர்த்து

நாளெல்லாம் வேலை பார்க்கிறேன்

நாளை வாழ்வதற்கு... 

நாளைக்கும் 

ஒரு நாளைதான் முளைக்கிறது

தேகம் காத்தால்

இதயம் கோர்த்தால்

இன்று பூக்கும்

இன்னல் நீக்கும்

தூங்கச் சொர்க்கம் சேர்க்கும்

வாழ்வை இனிதாக்கும்... 


h


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக