ஒவ்வொரு மரணமும்
வாழ்வைச் சொல்லித் தருகிறது
தந்தை என்பதால்
மகன் அழுதுகொண்டு
நண்பர்கள் என்பதால்
நாங்கள் அருகில் நின்று
புரியாத பாடத்தை
புதைத்திடக் காத்திருக்கிறோம்...
அழுது முடிக்கும் வரை
அவன் கூட நிற்பதைத் தவிர
வேறு யாதறிவோம்...
பராபரமே இயற்கையே
நண்பனின் மனமும்
அவன் தந்தையின் ஆன்மாவும்
சாந்தி அடைய வேண்டும்
நகர் நண்பர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக