செவ்வாய், 12 மார்ச், 2024

இளங்கோவன்


ஒவ்வொரு மரணமும்
வாழ்வைச் சொல்லித் தருகிறது
தந்தை என்பதால்
மகன் அழுதுகொண்டு
நண்பர்கள் என்பதால்
நாங்கள் அருகில் நின்று
புரியாத பாடத்தை
புதைத்திடக் காத்திருக்கிறோம்...
அழுது முடிக்கும் வரை
அவன் கூட நிற்பதைத் தவிர
வேறு யாதறிவோம்...
பராபரமே இயற்கையே
நண்பனின் மனமும்
அவன் தந்தையின் ஆன்மாவும்
சாந்தி அடைய வேண்டும்
நகர் நண்பர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக