பாழடைந்த ஜன்னலில்
பழைய தூசியாய் படிந்திருக்கும்
உன் நினைவுகள்...
நினைவுகளுக்கு
எட்டுக் கால் முளைக்கும்
நானே வலை நானே இரை...
காற்று தாலாட்டும்
சிலநேரம் இதயம் கிழித்து
ஊமையாய் நிற்கும்...
பாழாய்போன ஜன்னலை
எதேச்சையாக நீ திறந்ததும்
நான் அவளைப் பார்த்ததும்
அன்று நிகழ்ந்திருக்கக்கூடாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக