வெள்ளி, 28 ஜூலை, 2023


நீராகி நீர்த்த என்னை
வான் ஆக்க வந்ததெது
வானாகி நிறைந்த என்னை
மண்ணாக மாற்றுமெது
மண்ணாகி நிலைத்த என்னை
காற்றாகக் கரைத்ததெது
காற்றாகிக் கலந்த என்னை
ஒளியாகக் காண்பதெது
பெயரினுள் அடங்காதது
பெயரில்லாப் பெருவாழ்வது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக