புதன், 12 ஜூலை, 2023


நமக்குத் தெரிந்த மொழியில் மட்டுமே
நம்முடன் உரையாடுவதில்லை
கடவுள்...

செவிகளைத் தளர விட்டால்
எல்லாமே கேட்கிறது
எல்லாமே புரிகிறது...

காதைத்  திருகித்
தந்தைச் சொல்லித்
-தந்ததும் புரிகிறது...

கண்ணீர் வழிகிறது
அந்த மெல்லிய ஒலி
கடவுள் பேசியது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக