இலைகள் இல்லை
நினைவுகள் தான்
மீண்டும் மீண்டும் துளிர்க்கிறது
காற்றினிலே அசைகிறது
மெல்ல மெல்ல இசைக்கிறது...
மௌனமான கிளைகளெல்லாம்
ஈரம் இல்லாமல்
பாறைகளாய் பூத்து
மணலாக உதிர்கிறது
மெல்ல மெல்ல இசைக்கிறது...
ஒரு நாள் ஏதும் கேட்காது
விழிகள் கூட பூக்காது
ஒளியே காணும் விழியானது
பேரமைதி பேரிசையானது
மெல்ல மிகமெல்ல இசைக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக