கவிதைக்கு இரண்டு ரூபாய்...
ஏன் தரவேண்டும்
எதற்குத் தரவேண்டும்
கவிஞர் இல்லாத உலகம்
சுற்ற மறுத்திடுமா?
நீ எழுதாது
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
வண்ணம் அழிந்திடுமா?
என் மனதை
நீ வசியம் செய்ய
ஒப்புக் கொண்டால்
இருநிலை நடுநிலை ஆகிடுமா?
மலிந்த விலையில்
உயர்ந்த பொருளை
தந்திட உலகம் நம்பிடுமா?
வெறும் இரண்டு ரூபாய்க்கா
மெனக்கெட்டு எழுதினாய்
இதில் சத்தியம் இருப்பது சாத்தியமா?
கவிதைக்கு ஒரு ரூபாய்
பேரம் பேசி குறைத்து வாங்கி
விற்று இலாபம் பார்த்திடலாகிடுமா?
ஒன்றுக்கும் உதவாது எனினும்
எனக்கு ஒன்றைக் கொடு
என்னைப்போல் ஒன்றை காண விரும்புகிறேன்
என்றான் என் நண்பன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக