ஒரு பட்டாம்பூச்சி
காற்றில் கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறது
பூவின் காதில் சொல்ல...
நல்ல கவிதைக்கு
தேன் பரிசு
கவிதை கேட்காத
பூக்கள் மட்டும்தான்
கழன்று விழுகின்றன...
பட்டாம்பூச்சி படபடக்கிறது
தேனுக்காகவும்
கழன்று விழும் பூவிற்காகவும்...
கனவில்
யார் பூ?
யார் பட்டாம்பூச்சி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக