புயல், மழை
வெயில், நிழல்
இரவு, பகல்
இந்தக் கூட்டில்
இருந்துகொண்டே இருக்கிறது
உயிர்ப் பறவை...
புகையை ஊதுகிறேன்
சாராயம் ஊற்றுகிறேன்
சோற்றுக் கடன் தீர்க்க
அமைதியாய் இருக்கிறது...
மருத்துவரோ மாந்திரீகரோ
அமைக்கும் கூண்டிலெல்லாம்
சிறைபடாது...
அதன் சிறகுகளில்
எனை அணைத்திருப்பதை
உணரும் தருணத்தில்
இதோ சிறகை விரிக்கிறது
பறவை...
அது மறையும் வரை
பார்த்துக் கொண்டிருக்கும் கண்களை
யார் விரல்கள் மூடுமோ...
முன்னமே
புள்ளியாய் மறைந்த
புள்ளினம் வைத்தது
முற்றுப்புள்ளி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக