நின்று எரியும் நெருப்பு
நாவுகளை நாலாபுறமும் துருத்தி
உலகை ருசிக்கிறது
தனக்குள் கருகும் வாசத்தை
நமக்குள் கமழும் மணமாக
மாற்றிச் சமைக்கிறது
நீர் உறிஞ்சி பற்ற வைக்கும்
காற்று வாங்கி தீ வளர்க்கும்
பூவும் தான் ஒருவகையில் நெருப்பு
தீக் குளிக்கும் பட்டாம்பூச்சி
தேன் எடுத்துப் பறக்கும்
நானும் முயன்று கனவிலிருந்து கண்விழித்தேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக