மீன் தொட்டி போதும்
உணவு தந்தால் போதும்
எனும் மனிதா
மீன் மட்டும் பேச வாய் திறந்தால்...
உன் கைகள் செவி மூடும்
கடலுக்கு வழி தேடி
கணம் தோறும் புலம்பிடும்
கண்ணாடித் தொட்டி மீன்கள்...
குளத்தில், ஆற்றில்
விட்டுப்பார்
மீன் கடலைத் தான் தேடும்
கடல் சுதந்திரம்
கடல்
மீனின் ஞானம்
கடல் மீன்கள் கூட
கடலைத் தான் தேடும்
ஞானம் வந்த பொழுதில் தான்
கடலாக மாறும்
கடல்
ஆறு
குளம்
கண்ணாடி மீன் தொட்டி...
ஞானம் இல்லாதவர்கள்
வாழும் வீட்டின் சின்னம்
கண்ணாடி மீன் தொட்டி...
மனிதா
உன் ஞானம் தேடு
மீன்கள் வாழாது உன்னோடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக