பேரண்டப் பெரு வெளிக்கு
சொந்தம் கொண்டாடும் கலைஞனிடம்
வாடகை கேட்பது நியாயமா?
அவனும் வாடகை கொடுக்கிறான்
அநியாயமா...
கொடுப்பதற்கு கோடி உண்டு அவனிடம்
அந்தக் கோடியில் சில நூறு கூட இருக்காது
நீ கேட்கும் அச்சடித்த காகிதம்
எப்படி இருக்கும்
சுயநலமில்லாத ஓவியனிடம்
சுயம் மறந்த கவிஞனிடம்
சுதந்திரமாய் திரியும் பறவையிடம்...
பேரண்டப் பெரு வெளிக்கு
சொந்தம் கொண்டாடும் கலைஞனிடம்
வாடகை கேட்பது நியாயமா?
அவனும் வாடகை கொடுக்கிறான்
அநியாயமா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக