வீடு மட்டுமல்ல
தனக்கான சவப்பெட்டியையும்
வைத்திருக்கிறது ஆமை
முதலும் முடிவும்
அறிந்த ஆமை
நிதானமாக இருக்கிறது
கூடி இருந்தாலும்
தனித்தே இருக்கும்
தாமரை இலை நீர் ஆமை
தரையில் தவழும்
நீரில் நீந்தும்
தனக்குள் இருக்கும்
வானில் பறக்கும்
ஒரு ஆமை
ஒரு வீடு
ஒரு உலகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக