நீர் வற்றிய நதியில்
காணும் கானல் நீர்
நதியின் நினைவுகளா
ரதியின் நினைவுகளா
கடல் சேர்ந்த நதியின்
ஓயாத அழுகை
உப்பு
உடல் சேரும் உப்பில்
பாய்ந்தோடும்
உன் உணர்வுகள்
அலையலையாய்...
மாயக் கண்ணீர்த் துளிகள்
வழிந்து வரும்
துளித்துளியாய்...
நீர் வற்றிய கண்ணில்
காணும் கானல் நீர்
நதியின் நினைவுகளா
ரதியின் நினைவுகளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக