உள்ளங்கை பத்திக்கும்
ஆனாலும் தித்திக்கும்
சிக்கிமுக்கி கல்லுக்கும்
முன்பானது தேகக் கூடல்
உன் விழி வித்தைக்கும்
என் வழி மறக்கும்
தென்னம்பனை கள்ளுக்கும்
முன்பானது பார்வைக் கூடல்
உன் பாதம் நடக்கும்
என் இதயம் நடிக்கும்
நீ தாண்டி போனதும் தான்
அது மெய்யாகத் துடிக்கும்
வேர் ஈர்க்கும் நீரைப் போல
எனை ஏதோ இழுக்கும்
ஆகாயம் மலரைப் போல
மனதுக்குள் பூக்கும்
உன் இதழ்கள் நியாபகம் வந்து
தேன் மேலும் இனிக்கும்
தேனீக்கள் கனவினில் வந்து
யாரென்று தினம் கேட்கும்
கடல் அலையென நாவிற்கும்
ஓயாமல் ஓயாமல் தயக்கம்
ஒரு சொல்லை மீண்டும் மீண்டும்
சொல்லாமலே கொண்டு செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக