நினைவுகள் உதிர்ந்த மனமும்
இலைகள் இல்லாத மரமும்
நிழல் இன்றித் தவிக்கின்றது
இலைகள் வேண்டும்
அசைந்தாட வேண்டும்
மலர்கள் வேண்டும்
மனம் வீச வேண்டும்
இன்னிசை வேண்டும்
குயில் பாட வேண்டும்
பரவசம் வேண்டும்
பட்டாம்பூச்சிகள் வேண்டும்
வெயிலில்
ஒரு காலில்
தவம் கிடக்கின்றது
பனித் துளியில்
கடை இரவில்
உள்ளூர துளிர்க்கின்றது...