ஒரு குரலுக்கு
அக உருவம் வரையும்
அந்த ஓவியர் யார்?
எனக்குள் நானே
பேசும்போது
யாருடன் பேசுகிறேன்?
என்னுடைய மௌனம்
உன்னுடைய மௌனம்
இடம் மாறியது எப்படி?
கேள்விகளை எல்லாம்
யாரிடம் கேட்கிறேன்
பதில்களை எல்லாம்
யாரிடம் பெறுகிறேன்
வெளியே கேட்பது
வெளியே சொல்வது
நான்
உள்ளிருந்து கேட்பது
உள்ளிருந்து சொல்வது
யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக