புள்ளி மறையும் போது
வானம் தெரிகிறது
நான் மட்டும் தான் பார்க்கிறேன்
அது பார்க்கிறதா தெரியவில்லை
புள்ளி ஏன் பார்த்தேன்?
ஆம் அந்த வானத்தில்
இரு சூரியன்
அதன் மத்தியிலே
ஒரு நிலவு
குளிர் தேடி
கண்கள் குவித்தேன்
அப்படித்தான்
அந்த புள்ளியில் குதித்தேன்
ஆழம் அறிவதற்குள்
புள்ளி மறைந்தது
வானம் தெரிகிறது
நான் மட்டும் தான் பார்க்கிறேன்
அது பார்க்கிறதா தெரியவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக