பார்த்துக் கொண்டிருந்த குளத்தில்
வானம் நிரம்பி வழிந்தது
நாணல் துடுப்பை
காற்று இயக்க
மேக கப்பல் மிதந்தது
ஒளி
இருள் தேடி
இறங்கி வந்தது
தாமரையை
பரிசாக கொண்டு வந்தது
குளத்தின் ஆழத்தில்
உறங்கும் இருளை
மலர் வாசம் எழுப்பியது
இருள் மெதுவாக
எழுந்து வந்து
அல்லி மலர்க் கதவை
திறக்கின்றது
பின்னர் எல்லாமே
தானாக நடக்கின்றது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக