பெயரில்லா வீதிகள்
மதமில்லா தோழர்கள்
ஜாதியில்லா ஜனங்கள்
ஒன்றாய் கூடி வாழ்ந்த தருணங்கள்
வீட்டிற்கு பல மரம்
உறவாக வளர்த்த மரம்
உள்ளங்களைக் கவர்ந்த மரம்
கண் மறைந்து போனதெங்கோ
ராஜ், கீதன் வீட்டு மாமரம்
அரசு மருத்துவமனை அருகில்
நாவல் தூங்குமூஞ்சி மரம்
பிள்ளையார் கோயில் கற்பூர மாங்காய் மரம்
சமூகக் கூடம் எதிரில் நாவல் மரம்
மணி டெய்லர் கடை பாதாம் மரம்
பரணி வீட்டு மருதாணி நார்த்தங்காய் மரம்
கோபால் வீட்டு மாமரம்
நாவலன், பூங்குன்றன் வீட்டு வாழைமரம்
இமானுவேல் வீட்டு நெல்லி மரம்
டீச்சர்ஸ் ஹாஸ்டல் தைல மரங்கள்
பிரேம் வீட்டு மா பலா மரம்
ஆண்ட்ரூஸ் வீட்டு நெல்லி மரம்
ஜோதியம்மாள் நகர் வாழை மரங்கள்
கோபி வீட்டு முருங்கை மரம்
சரவணன் வீட்டு அரளி செம்பருத்தி மாமரம்
சிவா, ராஜா வீட்டு செம்பருத்தி மரம்
கோகுல் வீட்டு மாமரம் தென்னைமரம்
அருண் வீட்டு நெல்லி மரம்
ரேடியோ மாமா வீட்டு பலா மரம்
ரமேஷ், ரகு வீட்டு
மா எலுமிச்சை கருவேப்பிலை மரம்
லைப்ரரி தெருவில்
சப்போட்டா பலா எழுமிச்சை மரம்
ராஜா வீட்டு மாமரம் பிள்ளையார் கண் மரம்
ராஜேந்திரன் டாக்டர் வீட்டு மாமரம்
ராஜன்பாபு வீட்டு எதிரில் நாவல் மரம்
எ பிளாக் ஆலமரம் கொன்றை மரம்
சி பிளாக் அரசமரம்
டி பிளாக் ஆலமரம்
மணல் கிரௌண்ட் வேப்பமரம்
கே பிளாக் புங்கை மரம்
ராஜேந்திரன், செந்தில் வீட்டு
பப்பாளி முருங்கை தேக்கு மரம்
எம் பிளாக் தேன் காய் மரங்கள்
அரசு பண்ணை புளிய மரங்கள்
தொட்ட மரம் அத்தனையும்
சொல்லிவிட முடியவில்லை...
வீட்டிற்கு பல மரம்
உறவாக வளர்த்த மரம்
உள்ளங்களைக் கவர்ந்த மரம்
கண் மறைந்து போனதெங்கோ
பசுமை அழிந்து வரும் சென்னையில்
மரங்கள் குறைந்து வரும் நகரத்தில்
மதங்களின் பெயரால் பெருகி வரும்
தேவாலயங்கள் கோவில்கள் மசூதிகள் நடுவில்
ஏதேதோ ஜாதிப் பெயருள்ள தெருக்களில்
எங்கெங்கோ பிரிந்து பிழைத்துவருகிறோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக