சட்டை இல்லாத காந்தி
கையில் சாட்டையுடன்
தன்னைத்தானே வருத்திக் கொள்கிறார்...
அவர் உடலின் தோல் உரிகிறது
சில துளிகள் இரத்தம் வழிகிறது
சலங்கையும் மணிகளும் கதறுகிறது
கருணை சில்லறையாய் வந்து விழுகிறது
சில்லறை மத்தியில் பத்து ரூபாய் நோட்டு
காந்தியை பார்த்து காந்தி சிரிக்கிறார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக