காலை எழுந்ததும்
எல்லோர்க்கும்
பித்து பிடிக்கிறது
தானே நடப்பதை எல்லாம்
நானே நடத்திட
சித்தம் விளைகிறது
எல்லாமே கிடைக்கிறது
நடுவில்
யார் வந்து பதுக்கியது
இல்லாமல் இருக்கும்
தவறு தனதென்று
பெருங்கூட்டம் நம்பியது
சில கைகள் உண்பதை
பல கண்கள் விழுங்கி
போதாமல் உப்பிட்டது
தினந்தோறும் வருகிறது
சிலருக்கு உறக்கம்
பலருக்கு மயக்கம்
காலை எழுந்ததும்
எல்லோர்க்கும்
பித்து பிடிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக