ஞாயிறு, 13 மார்ச், 2022

 


காலை எழுந்ததும்
எல்லோர்க்கும்
பித்து பிடிக்கிறது

தானே நடப்பதை எல்லாம்
நானே நடத்திட
சித்தம் விளைகிறது

எல்லாமே கிடைக்கிறது
நடுவில்
யார் வந்து பதுக்கியது

இல்லாமல் இருக்கும்
தவறு தனதென்று
பெருங்கூட்டம் நம்பியது

சில கைகள் உண்பதை
பல கண்கள் விழுங்கி
போதாமல் உப்பிட்டது

தினந்தோறும் வருகிறது
சிலருக்கு உறக்கம்
பலருக்கு மயக்கம்

காலை எழுந்ததும்
எல்லோர்க்கும்
பித்து பிடிக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக