கதகதப்பு நீ
என்னைக் காத்திருப்பது நீ
ஊர் மூழ்கி இருந்தாலும்
தோளில் வைத்து
அந்தத் தேரில் வைத்து
கொண்டாடி இழுப்பவன் நீ
தரையில் வீழ்ந்த கொடி எனக்கு
பிடி நீ, நம்பிக்கை நீ
தந்தை நீ
விந்தை நீ
சிந்தை நீ
சிரிப்பு நீ
கண்ணீர் துடைக்கும் கை நீ
கட்டுக்குள் அடங்காத வானம் நீ
மூச்சுக்குள் அடங்கிய உயிர் நீ
சிறை நான்
ஆயுள் கைதி நீ
உன்னை எப்படி விடுவிப்பேன்...
நீ இறந்தாலென்ன?
உன் ஆயுள் இல்லை
என் ஆயுள் கைதி நீ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக