வாய் திறந்து அழைத்தால்
விலகிச் செல்கிறது
மௌனம்
மௌனம் பிடித்திருந்தால்
கூப்பிடக்கூடாது
கூடு விட்டுக் கூடு பாய வேண்டும்
மௌனத்தை தொடர்ந்து சென்றால்
உடலை விட்டு
உலகை விட்டு
உடையாத நீர்க் குமிழாய்
உயர உயரப் போக வேண்டும்
நினைவுகள் நீங்க வேண்டும்
முழுவதுமாக தொலைய வேண்டும்
தொலையத் தொலைய
நெருங்கும் மௌனம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக