ஒளி கூட
பகல் இரவு
வேடம் போடும்
காற்று கூட
மிதமாகும்
தீவிரமாகும்
ஆகாயம் கூட
கைக்குள் அடங்கும்
மெய்க்குள் விரியும்
மழை கூட
கடலாகும்
மேகமாகும்
மண் கூட
மலையாகும்
குழியாகும்
நான் கூட
நல்லவன்
கெட்டவன்
நீ கூட
நல்லவள்
கெட்டவள்
அசுரனும்
தேவனும்
வேறுவேறு இல்லை
ஒற்றை வேடம்
யாரிடமும்
பார்த்ததில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக