நீங்கள் சொல்லிக் கேட்காதது மட்டுமல்ல
நான் சொல்லி
நானே கேட்காதது தான் அதிகம்
உங்களுக்கு மட்டும் அல்ல
எனக்கும் நானேதான் கெட்டவன்
துவேஷச் சொற்களை
தூர இருந்து வீசாதீர்கள்
அது எப்போதும் ஊற்றெடுத்து
என்னில் நிரம்பி இருக்கிறது
என்னைப் பிடிக்காமல் தானே
உங்களை நோக்கி வருகிறேன்
அனுமதிக்கக் கூடத் தேவையில்லை
அலட்சியமாக இருந்து கொள்ளுங்கள்
இந்த மழைநீரைப் போல
கொஞ்சம் தேங்கி வடிந்து விடுவேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக