வெள்ளி, 24 ஜனவரி, 2020

உன் நிழல் நான்
எப்போதும் உன்னை
நான் பிரிவதில்லை

நான் மறைந்து
நீ தேடும் வேலையிலும்
உன்னில் தான் ஒளிந்திருப்பேன்

வெளிச்சம் காட்டாமலே
என்னைப் பூட்டி வைக்கிறாய்
இருந்தும் என்னால்
வெண்மை ஆகிட முடியவில்லை

இந்த கருப்பை ஏனோ
நீ காலம் முழுவதும்
நேசம் செய்கிறாய்

நினைவுகள் ஊட்டி
நித்தமும் வளர்க்கிறாய்
முத்தம் தராமலே
முடிவையும் தருகிறாய்

நீ
மண்ணில் புதைவாய்
நான்
உன்னில் புதைவேன்

முள்ளாக நானும்
பூவாக நீயும்
மீண்டும் இணைய
ரோஜா மாலைகள் தந்து
வழி அனுப்புகின்றனர்...

முத்தம் இல்லாமலே
நம்மை வாழச் சொல்லும்
இந்த மனிதர்களே வேண்டாம்

பிறந்தால் தானே பிரிவு
இப்படியே கலந்து இருப்போம்
உன்னில் நானும்
என்னில் நீயும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக