உன்னில் மூழ்கி
இருந்திடவே
இறந்திடவே
ஆசை கொண்டேன்
ஏனோ நீயும்
விலகிச் சென்றாய்...
தனிமையில் மூழ்கி
இருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்தேன்...
கவிதையாக வந்து
கரம் பிடித்தாய்
சொற்கள் ஆகி
சொக்க வைத்தாய்
களைத்துக் களைத்துப்
போடுகிறேன்
கலை உருவாய்
கண் நிறைத்தாய்
உருவத்தை நீ
விட்டு வந்து
அருவமாகி என்னை
அடைந்து விட்டாய்
உன்னில் மூழ்கி
இறப்பேன் பெண்ணே
என் கரங்கள்
இறுகப் பற்றிக்கொள்
வார்த்தைத் தீயில்
பற்றிக் கொல்
உருவம் இழந்து
உனை அடைவேன்...
இருந்திடவே
இறந்திடவே
ஆசை கொண்டேன்
ஏனோ நீயும்
விலகிச் சென்றாய்...
தனிமையில் மூழ்கி
இருந்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்தேன்...
கவிதையாக வந்து
கரம் பிடித்தாய்
சொற்கள் ஆகி
சொக்க வைத்தாய்
களைத்துக் களைத்துப்
போடுகிறேன்
கலை உருவாய்
கண் நிறைத்தாய்
உருவத்தை நீ
விட்டு வந்து
அருவமாகி என்னை
அடைந்து விட்டாய்
உன்னில் மூழ்கி
இறப்பேன் பெண்ணே
என் கரங்கள்
இறுகப் பற்றிக்கொள்
வார்த்தைத் தீயில்
பற்றிக் கொல்
உருவம் இழந்து
உனை அடைவேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக