வியாழன், 2 ஜனவரி, 2020

தூக்கம் இல்லாத இரவையும்
தூங்கி வழிகிற பகலையும்
சாபமாய் கொடுத்து விட்டு
சலனம் இல்லாத வான்குளத்தில்
நீளமாகக் கரைந்து விட்டாள்

சாபம் என்னை வதைக்கிறது
கண்களில் இருந்துனை பிரிக்கிறது
நஞ்சாய் நீளம் கலக்கிறது
இதயம் வலியிலும் சிரிக்கிறது
நினைவினில் கட்டி அணைக்கிறது

கசப்பு மட்டுமே பிடிக்கிறது
மௌனம் ஒன்றுதான் இனிக்கிறது
எழுதிஎழுதியே விரல் தொடுகிறது
நிழலும் சேர்ந்து சுடுகிறது
இரவின் உதடுகள் தணிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக