வெள்ளி, 3 ஜனவரி, 2020

பிச்சைக்காரர்

இரக்கம் தேடும் முகபாவம்
யாரோ இங்கு பரிதாபம்

இடைவிடாது முகபாவம்
உடைபடாத கல்மனம்
விடுவதாக இல்லை
இரக்கத்தை தந்து
கைமாறு பெற்றுக் கொண்டார்

அந்த முகபாவத்தை
முயன்று பார்த்தேன்
கண்ணாடி உடைந்து
பல சில்லுகளாய்
இதயத்தைத் தைத்தது

ஒரு கணம்
அந்த பெரியவரின் முகம்
நிழலாடிச் செல்கிறது
அதில் அந்த வலி
எங்குமே இல்லை

ஆயிரம் துண்டுகளாய்
மனிதனை வெட்டும் போது
கடைசி துண்டு
துடிப்பதே இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக