ஆம்ஸ்ட்ராங்
ஆம் ஸ்ட்ராங்காக
மாறி இருக்கிறார்
வெட்ட வெட்ட
மக்கள் மனத்தில்
வளர்ந்து நிற்கிறார்
புத்த சிலையின்
நிழலாய்
புன்னகைப் பூக்கிறார்
வறியவர்க்கு வந்துதவியவரை
யாரைத் தான்
கயவர்கள் விட்டு வைத்தார்கள்
வெட்டச் சொன்னவர்கள்
தெரியாமல் போனாலும்
தெரியாமலே போவார்கள்...
பாவம்
உயிர் எடுக்க வந்தவர்களுக்குத் தெரியாது
நீ
உயிர் கொடுக்க வந்த வீரனென்று
இனி
யார் கொடுக்க வருவார்கள்
இங்கெல்லோரும்
உயிருக்கு பயந்த கனவான்கள்
பாபாசாகேப்
புத்தர்
இறந்து வாழும் பட்டியலில்
இணைந்து கொண்டார்
ஆம்ஸ்ட்ராங்
ஆம் ஸ்ட்ராங்காக
மாறி இருக்கிறார்
இறந்தும்
வறியவர்க்காக
கொடி பிடிக்கிறார்
தன் கை
இல்லை என்றாலும்
தம்பிகள் கை வழியே
வறியவர்க்காக
கொடி பிடிக்கிறார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக