ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை தான்
குழந்தை வளர்ப்பு...
வெட்டுக்கிளிகளை
தட்டான், பட்டாம்பூச்சிகளை
பறவைகளை சிலந்திகளை
எறும்புகளை, எருமைகளை
இன்னும் எண்ணிலாத உயிரிகளை
விட்டு விலகி எடுத்துவந்து
கட்டுக்கடங்கி வளர்க்கின்றோம்
வேற்று கிரக வாசிகளாய்...
ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை தான்
குழந்தை வளர்ப்பு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக