எல்லோரும் பயப்படும் போது
சிரிக்கத் தோன்றும்
எல்லோரும் சிரிக்கும் போது
பயப்படத் தோன்றும்
எல்லோரும் கண்மூடும் போது
விழிக்கத் தோன்றும்
எல்லோரும் பேசும் போது
மௌனிக்கத் தோன்றும்...
எல்லோரும் பயணிக்கும் பாதைக்கு
எதிரில் நடந்திடும் ஒருவன்
என்னுள்ளும் இருக்கிறான்
அவன் இஷ்டப்படி நடக்கிறான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக