வெள்ளி, 23 பிப்ரவரி, 2024


எல்லோரும் பயப்படும் போது
சிரிக்கத் தோன்றும்
எல்லோரும் சிரிக்கும் போது
பயப்படத் தோன்றும்
எல்லோரும் கண்மூடும் போது
விழிக்கத் தோன்றும்
எல்லோரும் பேசும் போது
மௌனிக்கத் தோன்றும்...
எல்லோரும் பயணிக்கும் பாதைக்கு
எதிரில் நடந்திடும் ஒருவன்
என்னுள்ளும் இருக்கிறான்
அவன் இஷ்டப்படி நடக்கிறான்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக