யாராக மாறிக் கொண்டிருக்கிறோம்
நாம் நாமாகவா?
வேறாகவா?
சில வருடங்கள் கடந்து
வேறாக
பின்
சில மாதங்கள் கடந்து
வேறாக
பின்
வாரங்கள் கடந்து
வேறாக
பின்
ஒருநாளைப்போல்
மறுநாளில் இல்லாமல்
வேறாக வேறாக...
நான்
நாழிகையில் நாலாக
மாறிக்கொண்டே சுழல்கிறேன்
பூமி
நாழிகையில் நூறாக
மாறிக்கொண்டே சுழல்கிறது
விதை வேராக
வேர்
வேறிடம் போகும் பயணத்தில்
வேர்
இலையாகப் பூவாகப்
பூத்துக் கனிந்து
வீழும் விதையாக
வேரறுந்து இடையில்
காற்றின் உறவாக
மீண்டும்
மண் தொட்டு
வேர் விட்டு
வேர்
வேறிடம் போகும் பயணத்தில்
ஓரிடத்தில் சுழல்கிறது
இயற்கை இப்படித்தான்
புதிதாய் புதிதாய்
நாளும் சமைக்கிறது...
நாமும் கூட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக