புறம் காட்டி நிற்கும்
புலன்களை எல்லாம்
அகம் பார்த்து இருக்கும்
நெற்றிப் பொட்டில்
கட்டிப் போட்டது யார்?
ஐந்து குதிரை பூட்டிய
ரதம் ஒன்று
ஒற்றைக் காலில்
இழுத்து இழுத்துப் போகிறது...
உச்ச வெறி
உச்சந்தலை ஏறி
பிய்த்து எறியப் பார்க்கிறது
கண்ணுக்கு தெரியாத சங்கிலி
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக