எல்லோர்க்கும் தெரியும் ஒன்றை
யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்தேன்
எல்லோரும் அதைக் கேட்டு என் பின்னே
வருவது போல உணர்ந்து நின்றேன்
அன்னாந்து வானம் பார்த்தேன்
எல்லோர்க்கும் தெரியும் ஒன்றாகவே
அது இப்போதும் அங்கேயே இருக்கின்றது
யாருக்கும் தெரியாமல் எடுக்கும் கலை
யாரிடம் கற்றது என நினைத்தேன்
உன் முகம் வந்து போகின்றது
என் இதயத்தை தொட்டுப் பார்த்தேன்
அது இப்போதும் அங்கேயே துடிக்கின்றது
தெரியாமல் எடுப்பதை மட்டுமல்ல கற்றது
தெரியாமல் வைப்பதையும் கூட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக