ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025


வலி தான்

தூரத்திலிருந்து வந்தமர்ந்து

இதயத்தில் காதலானது


வலி தான்

எனக்கே எனக்கானதாக

எண்ணியெண்ணி ஏங்கவைத்தது


வலி தான்

புழுவென ஊர்ந்துவந்து

மனதில் பட்டாம்பூச்சியானது


வலி தான்

துன்பமாய் இன்பமாய்

இருவேடம் பூணுவது


வலி தான்

யாவுமது நடத்தும்

நாடகம் தான்


வலி தான்

யாரோடும் பேசாது

என்னோடுமட்டும் பேசுவது


வலி தான்

பைத்தியம் ஆக்கியது

தெளிய வைத்தது


வலி தான்

போகும் மானம்

கிடைக்கும் ஞானம்


வலி தான்

போரைத் துவங்குவது

சமாதானம் செய்வது


வலி தான்

வினை ஊக்கி

வினை நீக்கி


வலி தான்

ஊட்டும் பால்

ஊற்றும் பால்


வலி தான்

பூக்கிறது

உதிர்கிறது


வலி தான்

கொண்ட உயிர்

கொண்டுபோகும் மரணம்


வலி தான்

வாழும் பேய்

சாகும் கடவுள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக