மூடுபனி...
இன்னும் கொஞ்சம் இழுத்துப் போர்த்தி
தூங்கச் சொல்கிறது இயற்கை
மௌனமாய் ரகசியமாய்
என்ன புத்தி இது
எழுந்து சென்று பார்க்கிறது
எதையும் நம்ப மறுக்கிறது
மூடுபனி சிரித்தது
மெல்லத் தொட்டணைத்தது
சமாதானம் செய்தது
குளிர்ந்த மனது
குட்டித் தூக்கம் போட்டது
போர்வைக்குள்...
மூடிய விழிக்குள்ளும்
வந்தது மூடுபனி
யாரையோ ஒளித்து நிற்கிறது
ஊடுருவிப் பார்க்கும் விழிகள்
பரிட்சையமானது தான்
என் சொர்க்க வாசல் தான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக