எனக்குத் தெரியாதுதான் அன்று
உனக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்
உன்னைப் பிரிந்து தவிப்பேனென்று...
காட்டத் தெரியாத அன்பை
நீயும் கடந்ததன் வழி அறிந்திருப்பாய்
நான் கடக்கும்போது நினைக்கிறேன்
கடவுள் நம்பிக்கை இல்லாத நமக்கு
குல தெய்வம் தோன்றியது
இவ் வழியில்தானே தந்தையே... என் கடவுளே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக