வியாழன், 23 ஜனவரி, 2025


யார் யாரோ

என்னென்னவோ

சொல்லிக் கேட்காத மனது

அலைகள் 

சொல்லச் சொல்ல

கேட்கிறது


அலையாத மணலும்

அலையாத மனதும்

ஈரம் பொதிந்து இருக்கிறது


கரிப்பை வாங்கிக் கொண்டு

இனிப்பைத் தருகிறது

கடல் பேய்க் கரும்பு


அலைகளைப் பார்த்துத் திரும்பி வந்துவிட்டேன்

மணலைப் போலவே

மனதையும் வருடி

சமாதானப்படுத்தி இருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக