யார் யாரோ
என்னென்னவோ
சொல்லிக் கேட்காத மனது
அலைகள்
சொல்லச் சொல்ல
கேட்கிறது
அலையாத மணலும்
அலையாத மனதும்
ஈரம் பொதிந்து இருக்கிறது
கரிப்பை வாங்கிக் கொண்டு
இனிப்பைத் தருகிறது
கடல் பேய்க் கரும்பு
அலைகளைப் பார்த்துத் திரும்பி வந்துவிட்டேன்
மணலைப் போலவே
மனதையும் வருடி
சமாதானப்படுத்தி இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக