புதன், 30 அக்டோபர், 2024


உலகின் கடைசி இரு நபர்களும்

மூன்றாம் நபரைப் பற்றித்தான்

பேசிக் கொண்டு இருந்தார்கள்


கடவுள் 

அவர்களுக்குப் பரிசாக

ஒரு ஆப்பிளைக் கொடுத்தார்


மண்ணில் காட்டையும்

மனிதரில் கேட்டையும்

வளர்த்தது ஆப்பிள்


மீண்டும் 

காதல் அன்பு விரோதம்

தோன்றியது பெருங்கூட்டம்


மூன்றாம் போருக்குப்

போகும் வழியில்

சில ஒத்திகை நடக்கிறது


குண்டுகள் வெடிக்கிறது

குழந்தைகள் அழுகிறது

கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார்

கையில் ஒரு ஆப்பிளுடன்... 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக