உலகின் கடைசி இரு நபர்களும்
மூன்றாம் நபரைப் பற்றித்தான்
பேசிக் கொண்டு இருந்தார்கள்
கடவுள்
அவர்களுக்குப் பரிசாக
ஒரு ஆப்பிளைக் கொடுத்தார்
மண்ணில் காட்டையும்
மனிதரில் கேட்டையும்
வளர்த்தது ஆப்பிள்
மீண்டும்
காதல் அன்பு விரோதம்
தோன்றியது பெருங்கூட்டம்
மூன்றாம் போருக்குப்
போகும் வழியில்
சில ஒத்திகை நடக்கிறது
குண்டுகள் வெடிக்கிறது
குழந்தைகள் அழுகிறது
கடவுள் காத்துக் கொண்டிருக்கிறார்
கையில் ஒரு ஆப்பிளுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக