நீண்ட இடைவெளிக்குப் பின்
நாம் பார்த்துக் கொண்டோம்
நான் நின்றேன்
நீயும் நின்றாய்
நான் கையசைத்தேன்
நீயும் அசைத்தாய்
நான் குதித்தேன்
நீயும் குதித்தாய்
நான் போகும் இடமெல்லாம்
நீயும் வந்தாய்
நான் உன்னோடு அமர்ந்தேன்
நீயும் என்னோடு அமர்ந்தாய்
நான் பேசினேன்
நீ மௌனித்தாய்
நான் மீண்டும் மீண்டும் பேசினேன்
நீ மௌனமாகவே இருந்தாய்
நீ மௌனமாகவே இருந்து
எனையும் மௌனமாக்கினாய்
உன் மௌனம் அமைதியானது
என் மௌனமோ அமர முடியாதது
நான் எழுந்து நின்றேன்
நீயும் நின்றாய்
நான் விலகி நடந்தேன்
என்னோடே வந்தாய்
நான் திரும்பிப் பார்க்காதது
உன்னை வருந்தச் செய்திருக்கும்
இருந்தாலும்
நீ விட்டுச் சென்றிருக்கக் கூடாது
ஒரு இரவு தான்
என்றாலும்
எத்தனையோ யுகம் எனக்கு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக