சனி, 19 அக்டோபர், 2024


பசி 

ஒளிந்திருக்கும் ஆதி மிருகம்

கண்களுக்குள் பதுங்கிப் பாயக் காத்திருக்கும்... 


காடாகிலும் நாடாகிலும்

பசி வளர்ந்தால்

வேட்டையாடிக் கொல்லும்... 


காணத அந்தக் கடவுளை

வழிபட்டுப் படையல் படைக்காவிடில்

பேயாகி  இரத்தப் பலி கேட்கும்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக