உருவங்களைக் கடவுளாகச் சிலர்
அருவங்களைக் கடவுளாகச் சிலர்
அனைத்தும் கடவுளாகச் சிலர்
கடவுள் இல்லையெனச் சிலர்
யுத்தத்தால் இறக்கும் சிலர்
பஞ்சத்தால் இறக்கும் சிலர்
பசியால் இறக்கும் சிலர்
பேரிடரில் இறக்கும் சிலர்
என எப்போதும் உலகில் உளர்...
புதன், 31 ஜூலை, 2024
ஞாயிறு, 28 ஜூலை, 2024
திங்கள், 22 ஜூலை, 2024
ஞாயிறு, 21 ஜூலை, 2024
ரஜினி: கமல் 'இந்த அரசியல்வாதிகளுக்கு உடல் நலச் சான்று இல்லாமல் ஆட்சி அதிகாரம் தரக்கூடாதுபா...
நாமினேஷன் பண்ணும்போதே இதையும் பரிசீலிக்கனும்'
இது எப்டி இருக்கு...
கமல்: நீ சொல்றது சரி ரஜினி
அத நீ சொல்றது நியாயமாவும் இருக்கு.
ஆமாம். நீ அதனால்தானே அரசியலுக்கு வரலன்னு சொன்ன...
ரஜினி: ஊழல் பண்றாங்க, சிலர் மட்டும் ஜெயிலுக்கு போறாங்க, அங்கேயும் சகல வசதியும் கிடைக்குது.
அப்புறம் அவ்வளவு பெரிய சிறைச்சாலைகளில் இவங்களுக்கு மட்டும் நெஞ்சு வலி, அங்கிருந்து மருத்துவமனை, அப்புறம் சலுகை, பரிவு, அனுதாபம்... விடுவிக்கவும் படுகிறார்கள்.
போப்பா இந்த அமலாக்கத்துறை, காவல்துறை, மருத்துவமனை, நீதித்துறை எல்லாமும் கண்கட்டி வித்தை காட்டுதுபா...
கமல்: இத மொத்தமா உடனே சரி செய்யவும் முடியாது ரஜினி. அடுத்த காட்சியில எல்லாமும் மாறிட, இது படமா என்ன?
மையத்தில் நின்று தான் முடிவெடுக்கனும்...
குடி மகன்: ஏய்... ஓரமா போய் விளையாடுங்கபா...
ஆமாம் இது விளையாட்டு தான்.
ஆனா இளைய தலைமுறை குடி, பீடி இன்னும் பிற போதை எல்லாத்தையும் விட்டுட்டு, இந்த விளையாட்டுல களத்தில் இறங்கனும். எங்களுக்கு வயசாகிடுச்சி நாங்க ஓரமா போறோம்...
(ஒரு லாங் ஷார்ட்டில் இரண்டு நட்சத்திரங்களும் மின்னி மறைகிறது)
சனி, 20 ஜூலை, 2024
வெள்ளி, 19 ஜூலை, 2024
வியாழன், 18 ஜூலை, 2024
புதன், 17 ஜூலை, 2024
திங்கள், 15 ஜூலை, 2024
ஞாயிறு, 14 ஜூலை, 2024
சனி, 13 ஜூலை, 2024
வெள்ளி, 12 ஜூலை, 2024
ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை தான்
குழந்தை வளர்ப்பு...
வெட்டுக்கிளிகளை
தட்டான், பட்டாம்பூச்சிகளை
பறவைகளை சிலந்திகளை
எறும்புகளை, எருமைகளை
இன்னும் எண்ணிலாத உயிரிகளை
விட்டு விலகி எடுத்துவந்து
கட்டுக்கடங்கி வளர்க்கின்றோம்
வேற்று கிரக வாசிகளாய்...
ஒழுங்கு போல் தெரியும்
ஒழுங்கின்மை தான்
குழந்தை வளர்ப்பு...
புதன், 10 ஜூலை, 2024
திங்கள், 8 ஜூலை, 2024
கே.ஆம்ஸ்ட்ராங் (31/01/1971 - 05/07/2024)
ஆம்ஸ்ட்ராங்
ஆம் ஸ்ட்ராங்காக
மாறி இருக்கிறார்
வெட்ட வெட்ட
மக்கள் மனத்தில்
வளர்ந்து நிற்கிறார்
புத்த சிலையின்
நிழலாய்
புன்னகைப் பூக்கிறார்
வறியவர்க்கு வந்துதவியவரை
யாரைத் தான்
கயவர்கள் விட்டு வைத்தார்கள்
வெட்டச் சொன்னவர்கள்
தெரியாமல் போனாலும்
தெரியாமலே போவார்கள்...
பாவம்
உயிர் எடுக்க வந்தவர்களுக்குத் தெரியாது
நீ
உயிர் கொடுக்க வந்த வீரனென்று
இனி
யார் கொடுக்க வருவார்கள்
இங்கெல்லோரும்
உயிருக்கு பயந்த கனவான்கள்
பாபாசாகேப்
புத்தர்
இறந்து வாழும் பட்டியலில்
இணைந்து கொண்டார்
ஆம்ஸ்ட்ராங்
ஆம் ஸ்ட்ராங்காக
மாறி இருக்கிறார்
இறந்தும்
வறியவர்க்காக
கொடி பிடிக்கிறார்
தன் கை
இல்லை என்றாலும்
தம்பிகள் கை வழியே
வறியவர்க்காக
கொடி பிடிக்கிறார்...
ஞாயிறு, 7 ஜூலை, 2024
உன் கலையாத மௌனத்திடம்
அழுது புலம்புகிறேன்
இறுதியில்
என் மௌனம்
உன் மௌனத்தை முத்தமிட
நீ அனுமதித்தாய்...
உன் மடியில்
தலைச் சாய்த்து
என் மௌனம் படுத்துக்கொள்ள
வானைப் பார்த்துக்கொண்டிருந்த
உன் மௌனம்
என்னைப் பார்க்கத் துவங்கியதும்
நான் வானமாகிறேன்
சிறகடித்துப் பறந்து செல்கிறது
என்னில் சில பறவைகள்...
அழுது புலம்பி
ஆகாயம் ஆகும் தருணங்களில்
சிறகடிக்கும் ஓசை
மௌனத்தைத் தலைக்கோதும்
இதயத்தில் இசை பாடும்...
சனி, 6 ஜூலை, 2024
வியாழன், 4 ஜூலை, 2024
செவ்வாய், 2 ஜூலை, 2024
திங்கள், 1 ஜூலை, 2024
சபேஷ்ராஜா
ஓடும் ரயில் முன்
ஒரு பூ உதிர்ந்து
தன் வாழ்வின் மொத்த வலிகளையும்
சிவப்பு மையில் எழுதியது...
அந்த மொழியை
யார் அறிவர்?
யார் வலியை
யார் உணர்வர்?
தன் துக்கங்களின் ஆழத்தில்
வெட்டும் மின்னல் வலிகள்
தனக்கு மட்டுமே வெளிச்சம்
அதைக் காண முடியாமல்
பேரொளியில் கலந்தாயோ...
நண்பா சபேஷ்ராஜா
உனது ஆன்மா சாந்தி அடைய
இயற்கையை வேண்டுகிறோம்































