புதன், 1 நவம்பர், 2023


காற்றில் ஆடும் நாணலில்
நானும் ஆடுவேன்
காலை நேரப் பனியைப்போல்
புல்லில் தூங்குவேன்
எங்கும் பாயும் ஒளியென
கனவில் நுழைகிறேன்
எல்லையற்றத் தூய வெளியில்
தன்னை மறைக்கிறேன்
ஏதுமற்ற இரவரைப் போல
இருந்துப் பார்க்கிறேன்
இரையை வீசி என்னை
இறைவி வேட்டையாடினாள்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக