மரங்களின் காதுகளை தேடிக் கொண்டிருக்கிறேன்
தெரிந்தால் சொல்லுங்கள்
உயரத்தில் கூடி
ரகசியம் பேசும்...
சிலுசிலுவென சில வார்த்தைகள்
காதலாகத்தான் இருக்கும்
சலசலவென சில வார்த்தைகள்
ஊடலாகத்தான் இருக்கும்
மரங்களின் நிழலில் நிற்கையில்
சில வார்த்தைகள்
நீ பேசியதா?
மரம் பேசியதா?
நெஞ்சம் குளிரும்
இன்பம் துளிரும்
யாரும் பேசாத நேரங்களில்
நானும் மரமாகிறேன்
எனது காதுகளைத் தேடுகிறேன்
தெரிந்தால் சொல்லுங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக